மீனவர்களின் நலனுக்காக தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள கடல்பாசி வளர்க்கும் சிறப்புப் பூங்காவுக்கான நிலத்தை தேர்வு செய்து கொடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிலம் ஒதுக்கியப் பின் அதற்கானப் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த அரசு மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி […]
Continue reading …அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு இரண்டூ “கல்”தான் காரணம் என்று பெருமிதமாக பேசியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக ஆட்சிக்கு வருவதற்கு 2 “கல்”தான் காரணம் என்றும், அவற்றில் ஒரு கல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் மக்கள் நம்பிக்கையுடன் கொடுத்த மனுக்கள் என்றும் இன்னொரு கல் இளைஞர் அணி தலைவர் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய செங்கல் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் […]
Continue reading …அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேப்டாப் மற்றும் சான்றிதழ் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது: தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. அதிமுக ஆட்சியிலும், மறைந்த ஜெயலிதா அம்மையார் முதல்வராக இருந்தவரையில் நீட்டை தமிழகத்திற்குள் நுழையவிடல்லை. ஆனால், அவரது ஆட்சிக்குப் பின் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக நீட்டை தமிழ் நாட்ற்குள் நுழையவிட்டனர் என அதிமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Continue reading …12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் நிலையில் வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தற்போது திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இன்று 12ம் வகுப்பிற்கான கணித தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று அதன் வினாத்தாள்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் […]
Continue reading …தமிழ்நாடு அரசு சொத்தின் மீதான வரிகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்… சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150% உயர்த்தப்படுகிறது. இதேபோல, சென்னையோடு […]
Continue reading …ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இருப்பினும் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் வரும் ஜனவரி 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
Continue reading …திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. திருவரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி 2006-ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. […]
Continue reading …தமிழகம் முழுவதும் இன்று (03.10.2021) நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்களை காலை 7 மணி முதல் தேனி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 24,882 மையங்களில் நடைபெற்றது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டது. முதலாவது மாபெரும் கோவிட் […]
Continue reading …செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கோட்டம் பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உட்பட்ட பகுதிகளில் இன்று (26.09.2021) நடைப்பெற்று வரும் மாபெரும் மூன்றாவது தடுப்பூசி முகாமை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்லாவரம் நகராட்சியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் படர்ந்து இருந்த ஆகாய தாமரை அகற்றும் பணி மற்றும் ஏரியினை ஆழப்படுத்தி கரையை பலம்படுத்தும் பணியினை பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையானது 24.57 லட்சம் ஆகும். […]
Continue reading …தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி விரைவாக எடுத்துக் கொள்ள கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 23 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அதை தொடர்ந்து இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முறை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது, காலை 7 மணி முதல் மாலை 7 மண் […]
Continue reading …