தூத்துக்குடி கவுன்சிலர் வீட்டில் தேநீர், பொதுமக்களுடன் செல்ஃபி: நடைப்பயணத்தின்போது கனிமொழி கருணாநிதிக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Filed under: தமிழகம் |

*தூத்துக்குடி கவுன்சிலர் வீட்டில் தேநீர், பொதுமக்களுடன் செல்ஃபி: நடைப்பயணத்தின்போது கனிமொழி கருணாநிதிக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*

திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை நடைப்பயணத்தின்போது தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள தூத்துக்குடி மாநகர கவுன்சிலர் வீட்டில் தேநீர் அருந்தினார். வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்து செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார்.

அதிகாலை தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அதன் பின்னர் தூத்துக்குடி நகரக் காய்கறி சந்தையில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள், மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது லையன்ஸ் டவுன் பகுதியில் உள்ள மீனவர் பகுதியில் வாக்கு சேகரித்ததுடன், அங்குள்ள தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்சிலின் வீட்டில் தேநீர் அருந்தினார்.