திருச்சி அதிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு.

Filed under: தமிழகம் |

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

திருச்சி அதிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு.

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் மலைக்கோட்டை பகுதி கீரைக்கடை பஜார் பகுதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் வனிதா, மாணவரணிமாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,
எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கலிலுல்
ரஹகுமான்,
பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ரோஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்,தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் அதிமுக மாநகர், மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் பேசும்பொழுது திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர். எனவே வருகின்ற தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். என்று பேசினார் கூட்டத்தில்
நிர்வாகிகள் சிங்கமுத்து, கே.பி ராமநாதன், நத்தர்ஷா,வாழைக்காய் மண்டி, சுரேஷ் , பாலக்கரை ரவீந்திரன் சகாபுதீன்,
என்ஜீனியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம். மார்க்கெட் பிரகாஷ், அப்பாகுட்டி,
கல்மந்தை விஜி , வக்கீல் ராஜா ஈஸ்வரன், ரஜினிகாந்த், தென்னூர் ஷாஜகான், இலியாஸ், கதிர்வேல், மலைக்கோட்டை ஜெகதீசன், வக்கீல்கள் முல்லை சுரேஷ் , முத்துமாரி, சுரேஷ், ஜெயராமன், சசிகுமார் மற்றும் தேவ் சரவணன், சதீஷ், பொன். அகிலாண்டம், குமார்,கல்லுக்குழி முருகன், உடையான்ப்பட்டி செல்வம், அக்பர் அலி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை பகுதியில் நடந்த அ.தி.மு.க. தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசிய பொது எடுத்த படம். அருகில் நிர்வாகிகள் பேரவை அரவிந்தன், வக்கீல் வனிதா, மாணவர் அணி என்ஜினீயர் இப்ராம்ஷா, கலிலுல் ரகுமான், அன்பழகன் உள்பட பலர் உள்ளனர்.