இரவு 8 மணிக்கு மேல் பேருந்துகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா சாயல்குடி மக்கள் வேதனை.

Filed under: தமிழகம் |

இரவு 8 மணிக்கு மேல் பேருந்துகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா சாயல்குடி மக்கள் வேதனை.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து பரமக்குடி செல்வதற்கு இரவு 8:00 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாயல்குடி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சாயல்குடியில் இருந்து கடலாடி, முதுகுளத்துார் வழியாக பரமக்குடி செல்கின்றனர்.

அங்கிருந்து தொலைதுார நகரங்களுக்கு செல்லக் கூடிய பஸ்களுக்காக பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில் பல ஆண்டுகளாக சாயல்குடியில் இருந்து இரவு 8:00 மணிக்கு மேல் பரமக்குடி செல்வதற்கு பஸ் போக்குவரத்து இல்லாததால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

பயணிகள் கூறியதாவது:இரவு 8:00 மணிக்கு மேல் பஸ் வசதி பரமக்குடிக்கு இல்லாததால் சிரமமாக உள்ளது.

இரவு 11:00 மணி வரை பஸ் போக்குவரத்து சேவையை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிக்கலாம்.

பஸ் வசதி இல்லாததால் நீண்ட துாரம் சுற்றி அருப்புக்கோட்டை வழியாக மதுரை செல்லும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.