தெரு நாய்களின் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

Filed under: சென்னை |

தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் தெரு நாய் தொல்லை காரணமாக குழந்தைகள் முதியோர்கள் கடித்துக் குதறப்பட்டார்கள். தெரு நாய்களின் தொல்லையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து கேரளாவில் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருவதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நிலைமை விபரீதமாவதற்கு முன்பு சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.