அதிமுகவுக்கு இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுகவுக்கு இனி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியே கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் சமீபத்தில் அதிமுக பிரமாண்டமான மாநாடு நடந்தது. இன்று அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், “மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான், இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கூடிய கூட்டத்தை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, இது தானா சேர்ந்த கூட்டம். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்திடுவோம் என்றார்கள், இப்போது என்ன செய்து விட்டார்கள், நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்திருந்தும் திமுக நாடகமாகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.