ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் விழிப்புணர்வு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மக்களிடையே ஆன்ட்ராய்டு போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. தன்னிடமிருந்த பணத்தை மட்டும் இழந்தது போதாமல், பலர் கடன் வாங்கி விளையாடி ஏமாந்து, கடனையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு “சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு மோசடியால் பலர் உயிரிழந்து வருகின்றனர். முதலில் ஜெயிப்பது போல காட்டி நிறைய பணத்தை இழக்க வைக்கும் வகையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிடித்த நடிகர் விளம்பரம் செய்கிறார் என யாரும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல மோசடி ரம்மி” என அறிவிறுத்தி உள்ளார்.