ஆவேசமான டி.ஆர்.பாலு!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாக ஆன்லைன் தடை மசோதா குறித்து பேசிய பிறகு அளித்த பேட்டியில், “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நான்கு மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டும் காணாதது போல் இருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு உரிமை இல்லை. மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது” என்றும் அவர் தெரிவித்தார்.