இசைக்கச்சேரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்; மோடி கண்டனம்!

Filed under: இந்தியா,உலகம் |

ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ரஷ்யாவில் நடந்த இசை கச்சேரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 60 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இத்தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ராக் இசை குழுவினர் நடத்திய இசை கச்சேரியில் திடீரென அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 60 பேர் பலியானதாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் மோடி “ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன், இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுக்கு இந்தியா தனது ஒற்றுமையையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.