இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது திமுக

Filed under: அரசியல் |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

2020ம் ஆண்டு கொரொனா காலத்தை ஒட்டி பல சவால்கள் இருந்த நிலையில், தமிழக கஜானாவும் காலியாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது சிறந்த நிர்வாகத்திறன் மற்றும் சவால்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், வருகிற மே 7ம் தேதியுடன் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்வதால் திமுக கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இதை கொண்டாட தயாராக உள்ளனர்.