இவ்வாண்டும் டில்லியில் பட்டாசுக்கு தடை!

Filed under: இந்தியா |

டில்லி அரசு 5வது ஆண்டாக இவ்வாண்டும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து அறிவித்துள்ளது.

தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் மனிதர்கள் வாழ முடியாத இடமாக டில்லி மாறி வருகிறது. இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு வாகன போக்குவரத்தை குறைத்தல் உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை டில்லி அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள டில்லி சுற்றுசூழல்துறை அமைச்சர் கோபால்ராய், “டில்லியில் இம்முறை ஆன்லைன் மற்றும் நேரடி பட்டாசு விற்பனைகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு விற்கவும், வெடிக்கவும் ஜனவரி 1, 2023 வரை தடை விதிக்கப்படுகிறது. இதை கடுமையாக அமல்படுத்த டில்லி போலீஸ் மற்றும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் குழு செயல் திட்டம் வகுக்கப்படும். டில்லியை மாசு அபாயத்திலிருந்து காப்பாற்ற அனைத்து வகையான பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. 5-வது ஆண்டாக இவ்வாண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டில்லி அரசு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியிலிருந்து அனுப்பப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகுமென உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.