இஸ்ரேல் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Filed under: அரசியல்,இந்தியா |

டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் மர்ம வெடிச்சத்தம் கேட்டதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் தூதரகத்தின் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய்கள் சகிதம் அப்பகுதியை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் கொடியில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதில் என்ன எழுதியிருந்தது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் தூதரகம் இந்தியா செல்லும் இஸ்ரேல் மக்களை எச்சரித்துள்ளது. புத்தாண்டிற்காக பல இஸ்ரேல் மக்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் பொதுவெளியில் அதிகம் நடமாடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் தூதரகம் எச்சரித்துள்ளது. பொதுவெளியில் தாங்கள் இஸ்ரேலியர்கள் என அடையாளப்படுத்தும் விதமான எந்த சின்னங்களையும் அணிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் & ஹமாஸ் அமைப்பு இடையே நடந்து வரும் போரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.