உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

Filed under: இந்தியா |

உச்சநீதிமன்றம் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமான பெண்கள் கருக்கலைப்பு செய்ய ஏற்கனவே சட்டபூர்வ உரிமை இருக்கும் நிலையில் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. பாதுகாப்பான சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருவை கலைக்க அனுமதி கோரி திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்த அதிரடி தீர்ப்பை வழங்கிவுள்ளார். இத்தீர்ப்பு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.