உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை!

Filed under: இந்தியா |

விவசாயி ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் என்ற கிராமத்தில் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையை இரக்கமின்றி மண்ணில் புதைத்துள்ளார். அப்போது தற்செயலாக வந்த விவசாயி ஹிதேந்திர சிங், அக்குழந்தையை மீட்டு, அருகிலுள்ள ஹியத் நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையைப் புதைத்த அப்பா அல்லது அம்மாவை போலீசார் தேடி வருகின்றனர். உள்ளூர் மக்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ள போலீசார், விரைவில் அவர்களைக் கண்டுபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் ஒரு பெண் குழந்தையை உயிருடன் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.