ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு சீமான் உதவி!

Filed under: சென்னை |

சென்னை,மே 11

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு சீமான் உதவி. 

ஊரடங்கால் வருவாயின்றி உணவின்றி தவிப்பதாக உதவிகேட்டு வந்த சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (10-05-2020) அவரது இல்லத்தில் வழங்கினார்.