எலான் மஸ்க் டுவீட்

Filed under: உலகம் |

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சமீப காலமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முயற்றிப்பதாக தகவல்கள் வெளியானது.

உலகம் முழுவதிலும் அநேக மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது டுவிட்டர்.

டுவிட்டரிக் எலான் மஸ்க் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியிருந்த நிலையில் அவரை டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய டுவிட்டர் அழைப்பு விடுத்தது. டுவிட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கி கொள்ள விரும்புவதாக கூறிய எலான் மஸ்க் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்கா டாலர் என டீல் பேசி உள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் அவர் வாங்க முன்வந்துள்ளார், டுவிட்டர் நிறுவனம் ரூ.4,400 கோடி அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் பற்றி எலான் மஸ்க் தனது டுவிட்டரில், “கருத்துச் சுதந்திரம் என நான் கூறியவுடன் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். நான் கருத்துச் சுதந்திரம் என நான் கூறிய அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு எதிரான கருத்துகள் பரப்ப நான் எதிராவன். மேலும், ஒரு நாட்டின் சட்டத்திற்கு எதிரான செயல்படுவது அந்த நாட்டின் மக்களுக்கு எதிராகச் செயல்படுவது ஆகும்” என அதில் கூறியுள்ளார்.