ஐஐடி மாணவி சடலமாக மீட்பு!

Filed under: சென்னை |

சென்னை ஐஐடி மாணவி தண்டவாளத்தில் சடலமாக கிடந்த நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் தலை, முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மர்மமான முறையில் சடலமானகக் கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணையில், உயிரிழந்த பெண் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகாஸ்ரீ என்று தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும், டெல்லியில் எம்.டெக். பிஎச் டி முடித்தவர் என்றும், இவர் சென்னை ஐஐடியில் 3 மாத ஆராய்ச்சிகள் படிப்புகள் வந்ததாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.