கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு!

Filed under: சென்னை |

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். எனது கட்சித் தொண்டர் இந்த கல்லூரியின் சுவரில் போஸ்டர் ஒட்டியதால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன் என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விழாவில் முதலமைச்சர் பேசும் போது, “லட்சக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஒளியேற்றி உள்ளது. மாணவிகளின் தனித்திறமைக்கு கல்லூரியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்லூரி சென்ற போது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றுள்ளேன். நான் பள்ளிக்கு போகும்போது, ஸ்டெல்லா மேரிஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் ஏறுவேன். 29சி பேருந்தில் தான் அப்போது ஏறுவேன், சில நாட்களுக்கு முன் கூட அதே பேருந்தில் ஏறி ஆய்வு செய்தேன். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி எனது வாழ்வில் மறக்க முடியாத கல்லூரி. ஆகஸ்டு 15, 1947-ல் தொடங்கப்பட்டது தான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் சிறப்பு. கல்லூரி சுவற்றில் திமுக தொண்டர் ஒருவர் போஸ்டர் ஒட்டியதால் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டேன். நாடக விளம்பரத்திற்காக சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினோம். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சுவரில் போஸ்டர் ஒட்டியதால் போலீசாரிடம் புகார் தரப்பட்டது. நான் காவல்நிலையம் சென்றதற்கு காரணம், இந்த கல்லூரியில் ஒட்டிய போஸ்டர் தான்” என பேசினார்.