கவர்னர் ஆர்.என்.ரவி திராவிடம் என்பதற்கு தந்த விளக்கம்!

Filed under: தமிழகம் |

கவர்னர் ஆர்.என்.ரவி திராவிடம் என்றால் தமிழ் என சுருக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதில் பேசியபோது, ‘தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கு ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கியது. ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்படும் அளவிற்கு சுருக்கப்பட்டுள்ளது. பாரதம் என்ற சொல் ஆங்கிலேயர்கள் இந்தியா என்று பெயர் வைப்பதற்கு முன்னதாகவே வந்துள்ளது. பாரதியாரின் பாடல்களில் பாரதம் என்றுள்ளது. இந்தியா என்பது அனைவருக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ஒற்றுமை. ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவை ஒன்றிணைத்தது என கூறுவதில் உண்மை இல்லை. இந்தியா என்பது ஒருவர் ஆட்சியின்கீழ் எப்போதும் இருந்ததில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.