காவல்துறை செயல் கண்டிக்கத்தக்கது!

Filed under: அரசியல் |

எச்.ராஜா ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது என்று பேட்டியளித்துள்ளார்.

இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து தனது ஒற்றுமை என்ற யாத்திரையைத் தொடங்கவுள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் சென்ற அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுபற்றி பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது, “திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளுநர் வீட்டுக்கு முன்பாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமர் மோடி தமிழகம் வந்தார் அப்போது “கோ பேக் மோடி” என்று பலூன் பறக்கவிட்டனர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஜனநாயக உரிமை என்று கூறுபவர்கள், இன்று ராகுல் காந்திக்கு எதிராக அர்ஜுன் சம்பத் கருப்புக்கொடி காட்ட சென்ற போது கைது செய்தது கடனத்திற்குரியது. ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது” என கூறியுள்ளார்.