குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

Filed under: இந்தியா |

ரூ.28.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை குஜராத் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் என்ற பகுதியில், ரூ.15 .80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆறு பெட்டிகளில் இந்தக் கள்ள நோட்டுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், துரிதமாகச் செயல்பட்ட போலீசார் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தக் கள்ள நோட்டியில், ரிசர்வ் பேங்க் என்பதற்குப் பதிலாக ரிவர்ஸ் பேங்க் என்று அச்சடிக்கப்பட்டிருப்பதையும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.