குரங்கு அம்மை வீரியம்!

Filed under: உலகம் |

குரங்கு அம்மை வீரியம் நாளுக்கு நாள் 58 நாடுகளில், 6,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

முதன்முதலாக ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்நோயின் அறிகுறி கண்டறியப்பட்டது. இருந்தாலும், தற்போது ஆப்பிரிக்கா தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை வைரஸ் அதிகரித்து வருவதும், பரவலும் கவலை அளிக்கிறது. குரங்கு அம்மையால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். கடந்த 27ம் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77% அதிகரித்து இருக்கிறது. 85% பாதிப்பு ஐரோப்பாவில் பதிவாகி உள்ளது என கூறியுள்ளார்.