உலகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்!

Filed under: உலகம் |

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், தற்போது உலகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பல நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் இழப்பய் சந்தித்துள்ளது. ஊரடங்கை படிப்படியாக தளர்வு செய்து வரும் தருணத்தில் வைரஸின் தாக்கம் குறைந்த பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான மக்கள் ஊரடங்கு சமயத்தில் சோர்வடைந்து விட்டதால் உலகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.