சினிமாவில் 30 ஆண்டுகளை கொண்டாடும் ரஹ்மான்!

Filed under: சினிமா,சென்னை |

“ரோஜா” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். “ரோஜா” திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகி அவருக்கு அந்த படத்திலேயே தேசிய விருதையும் பெற்று தந்தது.

அதையடுத்து கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிந்த இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான் ஹாலிவுட்டுக்கும் சென்று இரண்டு ஆஸ்கர் விருதுகளை “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்துக்காக பெற்று வந்தார். இப்போது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து வருகிறார். அவர் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஆகஸ்ட் மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.