சினிமா பாடல்கள் பஸ்சில் போடக்கூடாது!

Filed under: சினிமா,தமிழகம் |

பஸ்சில் அதிக சத்தத்துடன் கூடிய சினிமா பாடல்கள் ஒலிபரப்பட்டு வருகின்றன. இந்த ஒலியால் பயணிகள் மற்றும் கண்டக்டருக்குமிடையேயான தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது.

இரட்டை அர்த்தமுள்ள பாடல்களும் இசைக்கப்படுவது, பயணிகளுக்கு இடையூறாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறையில் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, சென்னை மாநகரப் பேருந்துகளில் சினிமாப் பாடல்கள் இசைப்பதற்கு மாநகரப்போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரின் மன அழுத்தத்தைப் போக்கவே பாடல்கள் இசைக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதிக ஒலி மற்றும் பயணிகளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் பாடல்களை ஒலிபரப்பவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை விரைவில் 3000 பேருந்துகளில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.