ஜியோ பயனாளர்கள் பாதிப்பு!

Filed under: இந்தியா,உலகம் |

இன்று காலை முதல் நாடு முழுவதும் ஜியோ சர்வர்கள் முடங்கியதால் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சில ஆண்டுகளுக்கு முன் முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ நெட்வொர்க் இன்று உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன் முதல் பிஸினஸ்மேன் வரை எல்லோரும் இணையதளம் பயன்படுத்த ஜியோ வருகைதான் காரணம். இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஜியோ நெட்வோர்க் இன்று காலை முதல் தற்காலிகமாக செயலிழந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சண்டிகர், பெங்களுர், சென்னை உட்பட பல பகுதிகளில் ஜியோ நெட்வோர்க்கில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என்று ஜியோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.