டிமான்டி காலனி இரண்டாம் பாகம்!

Filed under: சினிமா |

இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

மாபெரும் வெற்றி பெற்ற படம் டிமான்டி காலனி. கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. இப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உட்பட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், “முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்கும். அதில் வந்த கதாபாத்திரங்களும், அவர்களுடன் சில புதிய முகங்களும் வருவர். அதில் சொல்லப்பட்ட வரலாற்றை இப்படத்தில் தேவைக்கேற்ப மாற்றி அமைத்திருக்கிறோம். இருப்பினும் அதனுடைய முன்னுரையுடன் அதே தொடர்ச்சியாகவே இப்படம் அமையும். 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அருள்நிதி தற்போது தேஜாவு, டைரி, டி ப்ளாக் உட்பட பல படங்களை நடித்து முடித்துள்ளார். டிமான்டி காலனி 2 படத்துக்கான கதையை அருள்நிதி கேட்டதுமே இது ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கு என்று சொல்லி, இதில் இணைந்துவிட்டார்” என கூறியுள்ளார்.