தமிழக -கேரள எல்லையில் வாகனங்கள் திடீர் நிறுத்தம்?

Filed under: இந்தியா |

திடீரென தமிழக மற்றும் -கேரள எல்லையில் அரசு பேருந்துகள் உட்பட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மற்றும் கேரள எல்லையிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அமல்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை சமீபத்தில் அறிவித்தது. எனவே வனப்பகுதியின் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைக்குள் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், ஆகியவை இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் கேரள காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் திடீரென இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.