தலைநகரில் வெடிபொருட்கள் பறிமுதல்

Filed under: இந்தியா |

தலைநகரான டில்லியில் வெடிபொருட்களை கொண்டு சென்ற 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுந்திரம் அடைந்த 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ஒட்டுமொத்த இந்திய மக்களும் தங்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படியும், தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள புரோபைல் டிபியில் தேசிய கொடி வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் முதற்கொண்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளனர்.
சுதந்திர தினவிழா நடைபெறும் செங்கோட்டை பகுதியில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே சுதந்திர தினத்தைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. டில்லியிலுள்ள ஆனந்த் விஹார் என்ற பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 2000 தோட்டாகள்,வெடிமருந்துகள் இருந்த பைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 75வது சுதந்திர தினம் இன்னும் 3 தினங்களில் நடக்கவுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.