தீக்குளிப்பதாக மதுரை திமுக நிர்வாகி மிரட்டல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி தமிழக ஆளுநரை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

திமுகவுக்கும் ஆளுநரான ஆர்.என்.ரவிக்கும் பொறுப்பேற்றதில் இருந்து இடையே பனிப்போர் நடந்து வருகிறது. மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டல் போஸ்டரில், “தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, ஒன்றிய அரசே உடனடியாக தமிழகத்தில் இருந்து வரும் 27ம் தேதிக்குள் ஆளுநரை மாற்ற வேண்டும். மாற்றாவிட்டாடல் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகியின் இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.