துபாய் கனமழை; தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!

Filed under: உலகம்,தமிழகம் |

துபாயில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் இந்த மழைக்கு மேக விதைப்பு காரணமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

துபாயில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக துபாயிலுள்ள பல சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக துபாய் விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கி இருந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டது. துபாய் கனமழைக்கு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில், “துபாய் மழைக்கும் மேக விதைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேக விதைப்பு செய்யப்படுவதற்கு முன்பே தீவிர மழை பெய்யும். சர்வதேச வானிலை அமைப்புகள் எச்சரித்து இருந்தன. மேக விதைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மழையை பெய்ய மேகங்கள் செயற்கையாக மாற்றி அமைக்கப்படும். இதற்கு விமானத்தின் மூலம் சில்வர் அயோடைடு என்ற துகள் மேகங்களில் தூவப்படும், ஆனால் துபாய் மழைக்கும் மேகவிதைப்புக்கும் எச்சம்பந்தமும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.