நடிகருக்கு அன்புமணி பாராட்டு!

Filed under: Uncategory |

அன்புமணி ராமதாஸ் நடிகர் அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரங்களில் நடிக்க மறுத்ததற்காக பாராட்டியுள்ளார்.

 

புகையிலை நிறுவனம் பெருந்தொகையை ஊதியமாக விளம்பரத்தில் நடிப்பதற்கு தருதாக சொல்லியும், சமூகக்கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி பாராட்டியுள்ளார்.

புஷ்பா படத்தின் மூலம் இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாகியுள்ள அல்லு அர்ஜுனை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வருகின்றனவாம். அப்படி சமீபத்தில் புகையிலை சம்மந்தபட்ட ஒரு நிறுவனம் அவரை அணுக, பல கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் சொல்லியும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன்.

புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக்கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது. நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப்பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன்.
புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.