நாடாளுமன்ற விழாவில் கலந்து கொள்வேன்: கமல்ஹாசன்!

Filed under: அரசியல்,இந்தியா,சினிமா |

நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட விழாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் இந்த முடிவை எடுத்து உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்துமே இவ்விழாவை புறக்கணிக்க உள்ளனர். அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளன. கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மன்ற கட்சி இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. “புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் பிளவுபட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தேசிய நலன் கருதி இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.