காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவிலுள்ள ராகிணி பூங்காவில், நேற்று மாலையில், 20 வயதுடைய காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள், காதல் ஜோடியுடன் தகராறு செய்து, அவர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், செக்டர் 49 காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, சி.ஆர்.பி.சியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், பரோலா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ராஜ், ரமேஷ் வர்மா ஆகிய இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related posts:
மகராஷ்டிராவில் மூவாயிரம் காவல்துறையினர் கொரோனாவால் பாதிப்பு; 30 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனவிலிருந்து குணமடைதோர் விகிதம் 63.45 சதவீதமாக அதிகரிப்பு!
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளைகள்; மத்திய உள்துறை அமைச்சகம் ...
கொரோனா வைரஸ் முடிந்த பிறகு இந்தியா முன்னேற்றத்துடன் இருக்கும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா!