படத்தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் ஏவிஎம் நிறுவனம்!

Filed under: சினிமா |

பிரபல இயக்குனர்களோடு மீண்டும் படத் தயாரிப்பது தொடர்பாக ஏவிஎம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஏவிஎம் நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடுவதை நிறுத்தி வைத்திருந்தது.தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீபகாலமாக படத்தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டி வந்தது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய “தமிழ் ராக்கர்ஸ்” என்ற வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்போது ஏவிஎம் நிறுவனம் மீண்டும் அறிவழகனோடு இணைந்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.