சமீபத்தில் சென்னையில் தியாகராய நகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை தேவஸ்தான குழு செய்துள்ளது.
Related posts:
பேருந்துகளில் 5 வயது குழந்தைகளுக்கு கட்டணமில்லை!
1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு
வழிபாட்டு தளங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ...
அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்