பல நூறு கோடி மதிப்பில் பிடிபட்ட போதைப்பொருள்!

Filed under: இந்தியா |

தலைநகர் டில்லியில் ரூ.1200 கோடி மதிப்பு போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் 1200 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருள் பிடிபட்டுள்ளது. இதையடுத்து இப்போதைப் பொருளை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரிடம் கைப்பற்றியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது ஆப்கான் நாட்டைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையில் லக்னோவில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 312 கிலோ போதைப்பொருள் சிக்கி உள்ளது. அதன் மதிப்பு 1,200 கோடி என்று கூறப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் 1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியுள்ளது தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.