பள்ளிக்கல்வித் துறை இனிமேல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழ் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளிலும் அரசு பணிகளுக்கும், மருத்துவ படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து சான்றிதழை பெற்று வந்தனர். சமீபத்தில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமையாசிரியர் வழியிலும் ஆன்லைனிலும் வாங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது ஆன்லைனில் மட்டுமே இனி தமிழ் வழி படித்ததற்கானச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வாங்குபவர்கள் கவனத்திற்கு ஆவின் அட்டகாச அறிவிப்பு !!!
திருச்சி பொன்மலைப்பட்டியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலரும் சந்திப்பு நினைவுகள் நி...
புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்
ரேசன் அட்டைகாரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ரூபாய்.50,000 சிறுகடன் உதவி - அமைச்சர் செல்லூர் ராஜீ!