பாலாற்றில் வெள்ளபெருக்கு!

Filed under: தமிழகம் |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் தொடர் மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாலாறு கரையோரங்களில் உள்ள ஏழு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1724 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக பாலாற்றங்கரையில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்று கரையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.