பிளாஸ்டிக் கவரில் தொழிலதிபரின் பிணம்!

Filed under: சென்னை |

மர்ம நபர்கள் சென்னையில் தொழிலதிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் வைத்து வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலதிபர் பாஸ்கரன் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவர் ரியல் எஸ்டேட், கட்டுமானம், பைனான்ஸ், சினிமா தயாரிப்பு உட்பட பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட சென்ற நிலையில், அவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. அவர் செல்போன் எண்ணும் சரியாக இயங்கவில்லை. ஆகவே, இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்துள்ளனர். இன்று சின்மயா நகரில் பிளாஸ்டிக் கவரில் பாஸ்கரன் உடல் மர்ம நபர்களால் வீசிச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடய அறிவியல் வல்லுனர்களை வரவழைத்தும் ஆய்வு செய்தனர். அதில், கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதும், கூலிப்படையினர் பாஸ்கரனை கொன்றிருக்கலாம் என்ற பலவகை கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.