புதுடில்லியில் பட்டாசு வெடிக்க தடை!

Filed under: இந்தியா |

தீபாவளியன்று புதுடில்லியில் பட்டாசு வெடிக்க அரசு தடைவிதித்துள்ளது. இத்தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மனிதர்கள் வாழ முடியாத இடமாக டில்லி மாறி வருகிறது. இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்த வாகன போக்குவரத்தை குறைத்தல் உட்பட்ட பல நடவடிக்கைகளை டில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால்ராய், “டில்லியில் இந்த முறை ஆன்லைன் மற்றும் நேரடி பட்டாசு விற்பனைகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு விற்கவும், வெடிக்கவும் ஜனவரி 1, 2023 வரை தடை விதிக்கப்படுகிறது. இதை கடுமையாக அமல்படுத்த டில்லி போலீஸ் மற்றும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் குழு செயல் திட்டம் வகுக்கப்படும். டில்லியை மாசு அபாயத்திலிருந்து காப்பாற்ற அனைத்து வகையான பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார். தொடர்ந்து 5-வது ஆண்டாக இவ்வாண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டில்லி அரசு தடை விதித்துள்ளது. இதனால் பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. டில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இத்தடையை நீக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.