பொறியியல் கல்லூரிகள் புதிதாக தொடங்க தடை!

Filed under: தமிழகம் |

2024ம் ஆண்டு வரை நாடு முழுதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பாடப் பிரிவுகளை மட்டும் தொடங்க அனுமதியளித்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தற்போது 443 கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரி குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு பின் 2022ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தடை விதித்தது. இத்தடையை 2024ம் ஆண்டுவரை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நீட்டித்துள்ளது. எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க முடியாது.