லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/06/army-man-tamilnadu-.jpg)
உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் வீரமரணம் அடைந்துள்ளார். ராணுவ வீரர் பழனிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியது: லடாக் பகுதியில் சீனா ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/06/eps-tweet-for-army-man-.jpg)
மேலும் பழனி 22 வருடமாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு வயது 40 ஆகும். அவருக்கு பத்து வயது மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். அவருடைய மனைவியும் மற்றும் குழந்தைகளும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.