மதுபோதையில் மாடியிலிருந்து கீழே விழுந்து பெண் பலி

Filed under: இந்தியா |

மதுபோதையில் 7வது மாடியிலிருந்து கீழே விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த புதன்கிழமை மாலை தன் நண்பர்களுடன் சேர்ந்து பில்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளார். அங்கு, நண்பர்களுடன் இணைந்து இளம்பெண்ணும் மது பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அனைவரும் மதுபானம் குடித்து வந்த நிலையில், இளம்பெண் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இளம்பெண் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இளம்பெண்ணுடன் மதுபான பார்டியில் ஈடுபட்ட 2 ஆண் நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.