மாணவன் ஒருவன் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த மாதையன் தங்கமணியின் மகன் திவாகர். இன்று பள்ளிக்குச் சென்றபோது, பள்ளிபேருந்தில் படிக்கட்டில் நின்றபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, படியில் நின்றிருந்த திவாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால், அவர் மீது பேருந்து ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மாணவன் திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பலியான மாணவன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
இறந்த பெண்ணின் உடலை மரக்கட்டையில் சுமந்து சென்ற அவலம்!
முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள...
லாட்டரி மார்ட்டினிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடை! தேர்தல் பத்திரத்தில் அம்பேல்!
*முன்னாள் அதிமுக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் விடுதலை*



