மத்திய அரசு நாடகம், மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

Filed under: தமிழகம் |

மக்கள் நீதி மய்யம் மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் மானியம் என்று அறிவித்து நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய அரசு எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த மானியம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மட்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்கு மட்டுமின்றி அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையை குறைத்தால் தான் நிம்மதியாக சமைக்க முடியும் என்றும் எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் பணவீக்கம் விலைவாசி உயர்வை மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவது ஆகவே எண்ணத்தோன்றும் என்று தெரிவித்துள்ளது.