மயிலாடுதுறை சேலம் ரயில் சேவை தொடக்கம்!

Filed under: தமிழகம் |

புதிதாக மயிலாடுதுறையிலிருந்து சேலம் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

மயிலாடுதுறையிலிருந்து சேலம் இடையே ரயில் போக்குவரத்து அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சி, திருச்சியிலிருந்து கரூர், கரூரிலிருந்து -சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒன்றிணைத்து தற்போது மயிலாடுதுறையிலிருந்து சேலம் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ரயில் தினசரி இயக்கப்படும். காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த ரயில் கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி கரூர் நாமக்கல் வழியாக 1.45 மணிக்கு சேலம் செல்கிறது. அதேபோல் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும்.