மாலினி பார்த்தசாரதி தி இந்து குழுமத்திலிருந்து விலகியது ஏன்?

Filed under: சென்னை |

நேற்று திடீரென தி இந்து குழுமத்தில் தலைவராக இருந்த மாலினி பார்த்தசாரதி விலகி உள்ளார்.அந்த பதவிக்கு நிர்மலா லக்ஷ்மணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்து குழுமத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து மாலினி பார்த்தசாரதி விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கான இடமும் பணிக்கான சூழலும் குறைந்து போன நிலையில் தி இந்து நாளிதழின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறேன். எனது சவாலான பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்து குடும்பத்திலிருந்து மாலினி பார்த்தசாரதி விலகியது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று பலரும் கூறி வருகின்றனர்.