மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில அறிவுரைகளை கூறினார். அதில் “எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர் பதில் சொல்லியாக வேண்டும், எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும், எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம், குறிப்பாக தோழமை கட்சிகளை இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும்”எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரின் இந்த எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாவட்ட செயலாளர்களும் பொறுப்புடன் பணிபுரிவார்கள் என்றும் தங்கள் மாவட்டத்தில் வாக்குகள் குறைந்தால் தங்கள் பதவிக்கே வேட்டு என்ற நிலை ஏற்படலாம் என்ற அச்சத்துடன் பணிபுரிவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று வெளியாகி உள்ளது. மாவட்ட செயலாளர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தால் 40க்கு 40 நிச்சயம் என்றும் திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன.