மின்னல் தாக்கி மாணவன் பலி!

Filed under: தமிழகம் |

11ம் வகுப்பு மாணவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பள்ளியில் விளையாட்டு பாட வேலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கஜினி என்ற மாணவர் பந்து வீசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் வந்து தங்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர் கழுத்தில் வெள்ளி செயின் போட்டிருந்ததால் அதனால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.